கன்னியாகுமரி

கன்னியாகுமரி        
                
                                    கன்னியாகுமரி(kanyakumari).இந்தியாவின்தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு வங்காள விரிகுடா, அரபிக்கடல், மற்றும் இந்தியப் பெருங்கடல்ஆகியவை இணைகின்றன. இது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு உலகப் புகழ் சுற்றுலாத் தலமாகும். இங்கு விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133-அடி திருவள்ளுவர் சிலை ஆகியவை புகழ்பெற்றவை. கன்னியாகுமரியில் தான் மகாத்மா காந்தியடிகளுடைய அஸ்தி கரைக்கப்பட்டது. காந்தியடிகளுடைய மற்றும் காமராஜருடைய நினைவு மண்டபம் கன்னியாகுமரியில் உள்ளது.
  இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இது தமிழகத்தின் மூன்றாவது வளர்ச்சியடைந்த மாவட்டமாகும். மக்கள் தொகை நெருக்கத்தில் தமிழகத்தில் இரண்டாம் இடம் (ச.கிமீக்கு 1111-பேர்)(2011 கணெக்கெடுப்பின் படி) வகிக்கிறது. நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை, ஆகிய 4 நகராட்சி்கள் உள்ளன.தமிழின் ஐந்திணைகளில் நான்கு திணைகள் (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்) ஒருங்கமைந்த மாவட்டம். இயற்கை அழகுக்கு பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு சுவர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கேரள மாநிலமும் வடக்கிலும் கிழக்கிலும் எல்லைகளாக தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டமும் இருக்கின்றன.2006 டிசம்பர் 26 அன்று தெற்காசியாவையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கடற் பகுதிகளை கடுமையாகத் தாக்கிய சுனாமிப் பேரலை இம்மாவட்டத்தையும் பெரும் நாசத்துக்கு உள்ளாக்கியது

பெயர் வரலாறு 

         சிவபெருமானை அடைவதற்காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரணமாக 'கன்னியாகுமரி' என்று அழைக்கப்பட்டது. குமரி கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தன் நாயகனுக்காக காத்திருந்த இடம் என்ற பொருளிலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,678 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கன்னியாகுமரி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 88.62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கன்னியாகுமரி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கன்னியாகுமரி கடற்கரை

           
 கன்னியாகுமரிகடற்கரை இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு எழில் மிகுந்த கடற்கரையாகும். இந்தியாவின் சிறப்பு பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ள இக்கடற்கரை கன்னியாகுமரி மாவட்டம்,நாகர்கோயிலிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கடற்கரைப் பகுதியில் பகவதி அம்மன் கோயில், மகாத்மா காந்தி மண்டபம்விவேகானந்தர் பாறை, காமராசர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைபோன்றவை சுற்றுலா பயணிகளைக் கவரும் இடங்களாகும். இங்கு நிகழும் சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவு நிகழ்வினைக் காண ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இக்கடற்கரையில் கூடுகின்றனர். இந்தக் கடற்கரையிலுள்ள மண் பல நிறங்களைக் கொண்டதாக இருக்கிறது.


சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோயில். சிவன்,விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது.

சுசீந்திரம் பெயர்க் காரணம்அத்திரி முனிவரும், அனுசுயாவும் இங்குள்ள தல விருட்சமான கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர். இதைக் குறிக்கும் விதமாக மும்மூர்த்திகளும் ஒரு முகமாய் தாணுமாலயன் என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளனர். சிவன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) ஆகிய முப்பெருங்கடவுள்களும் சேர்ந்துள்ள இத்தல மூர்த்தி தாணுமாலயன் என அழைக்கப்படுகிறார்.அத்திரி முனிவரும், அவருடைய இல்லத்தரசியும் கற்புக்கரசியுமான அனுசுயாவும் ஞானாரண்யம் எனும் பழம்பெயர்பெற்ற சுசீந்திரத்தில் தவம் செய்தனர். இந்நிலையில், அத்திரி முனிவர் இமயமலை சென்றார். அப்போது சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமணர் வேடம் அணிந்து, அவருடைய ஆசிரமத்திற்கு வந்து உணவு தருமாறு வேண்டினர். அனுசுயாவும் உணவு படைக்கத் தொடங்கினார். அப்போது மூவரும், ”ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்படுமாயின் உணவு உண்ண ஆகாது” என்று கூறினர். இதைக் கேட்டு திடுக்கிட்ட அனுசுயாதேவி தன் கணவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீதும் தெளித்தார். அவர்கள் மூவரும் பச்சிளங்குழந்தைகளாக மாறினர். பின்பு அந்தப் பச்சிளங்குழந்தைகளுக்கு உணவூட்டி, தொட்டிலிட்டு, தாலாட்டித் தூங்கச் செய்தாள். தங்கள் கணவர்கள் பச்சிளங்குழந்தையாக மாற்றப்பட்டதை அறிந்த மூவரின் தேவியரும் அங்கு வந்து அனுசுயாவிடம், தங்கள் கணவர்களை பழைய உருவிற்கு மாற்றித் தர வேண்டினர். தேவியர்கள் வேண்டுகோளுக்கிணங்கிய அனுசுயா முப்பெரும் கடவுளுக்கும் பழைய உருவைக் கொடுத்தாள். அப்போது திரும்பி வந்த அத்திரி முனிவரும் அனுசூயாவோடு சேர்ந்து, மும்மூர்த்திகளின் காட்சியைப் பெற்றார். இந்நிகழ்ச்சியை நினைவூட்டவே சுசீந்திரம் கோவில் கட்டப்பட்டுள்ளது என்கிறது இதன் தல வரலாறு.
தாணுமாலயன் கோயில் அமைந்துள்ள இடம் சுசீந்திரம் என அழைக்கப்படுகிறது. அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் நீங்க தேவேந்திரன் இத்தலத்துக்கு வந்து மும்மூர்த்திகளை ஒரே சமயத்தில் வழிபட்டு விமோசனம் பெற்ற தலம் இது. சுசீ என்றால் தூய்மை என்று பொருள். இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் சுசீந்திரம் என அழைக்கப்படலாயிற்று.

மண்டபங்கள்

இக்கோயிலில் கலை வேலைப்பாடுகள் மிகுந்த சில மண்டபங்கள் உள்ளன. அவை;
  1. கலைநயத்துடனான சிற்பங்களுடன் கூடிய செண்பகராமன் மண்டபம்.
  2. இசைத்தூண்கள் கொண்ட குலசேகர மண்டபம்.
  3. திருக்கல்யாணம் நடக்கும் ஊஞ்சல் மண்டபம்.
  4. வேனிற்காலத்தில் மும்மூர்த்திகள் ஓய்வெடுக்கும் வசந்த மண்டபம்.
  5. பல இறையுருக்களின் சிற்பங்களைக்கொண்ட சித்திர சபை.

விழாக்கள்

இங்கு தினசரி வழிபாடுகள் நடத்தப் பெற்றாலும் கீழ்க்காணும் விழாக்கள் இக்கோயிலில் மிகச் சிறப்பாக நடத்தப் பெறுகின்றன.
  • சித்திரை தெப்பத்திருவிழா - 1 நாள்
  • ஆவணி பெருநாள் திருவிழா - 9 நாள்
  • மார்கழி திருவாதிரை திருவிழா- 10 நாள்
  • மாசி திருக்கல்யாண திருவிழா - 9 நாள்

அனுமன் சிலை

மேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தைத் தோண்டும்போது அனுமன் சிலை ஒன்று கிடைத்தது. 18 அடி உயரமுடைய இந்தச் சிலை 1929 ஆம் ஆண்டில் இராமபிரானின் கருவறைக்கு எதிரில் இருக்குமிடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

சிறப்புகள்

  • இக்கோயில் 5400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.
  • இக்கோயிலின் அரச கோபுரத்தின் உயரம் நூற்று முப்பத்தி நாலரை அடி இருக்கிறது.
  • இக்கோயிலில் கணபதியைப் பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பம் உள்ளது. இதை “விக்கினேசுவரி” என அழைக்கிறார்கள்.
  • இக்கோயிலின் நவக்கிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நவக்கிரகங்களின் சிற்பங்கள் மேற்கூரையில் உள்ளன.

போக்குவரத்து

தேசிய நெடுஞ்சாலை 7 (வாரணாசி-பெங்களூரு-கன்னியாகுமரி) கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறது. அதுமட்டுமின்றி இந்நகரம் தென்னிந்திய இரயில்வேயின் சந்திப்பாகும். ஐந்து நாட்களில் , 4273 கிலொ மீட்டர், பயணிக்கும் இந்தியாவின் மிக நீண்ட தூரம் மற்றும் நேர ரயிலான விவேக் விரைவு ரயில், கன்னியாகுமரியையும் திப்ரூகர் (அஸ்ஸாம்) இணைக்கிறது

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 18,63,174 ஆகும். ஆண்கள் 9,36,374, பெண்கள் 9,26,800. மக்களில் 82.47% நகர்ப் புறத்தவர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1010 பெண்கள் என்றமைந்துள்ளது. கல்வியறிவு சராசரியாக 92.14% (2011) ஆண்களில் 93.86%, பெண்களில் 90.45% ஆகும்.

வரலாறு

          கன்னியாகுமரி என்ற பெயர் இப்பகுதியில் புகழ் பெற்ற குமரி அம்மன் என்னும் இந்து சமயக் கடவுளை மையப்படுத்தும் தல புராணத்திலிருந்து இம்மாவட்டத்துக்கு கிடைத்திருக்கிறது. இது பார்வதி தேவி தன்னுடைய ஒரு அவதாரத்தில் 'குமரிப் பகவதி' என்னும் பெயருடன் சிவனை சேரும் பொருட்டு இந்நிலப் பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் தவம் செய்ததாக கூறுகிறது.
                சங்க காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும் பகுதிகளை ஆய் என்னும் சிற்றரசனே ஆண்டதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் பொதுவாக அழைக்கப்படும் 'நாஞ்சில் நாடு', 'இடை நாடு' ஆகிய பகுதிகளை இம்மாவட்டம் உள்ளடக்குகிறது. இப்பகுதியில் வயல்கள் அதிக அளவில் இருந்ததால், நிலத்தை (வயலை) உழ பயன்படும் நாஞ்சிலிலிருந்து (கலப்பை) இந்நிலப்பரப்புக்கு இப்பெயர் வந்தது என்பது பெயரியல் நிபுணர்களின் துணிபு. தற்போது அகத்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டங்களாக இருக்கும் நாஞ்சில் நாடு, பத்தாம் நூற்றாண்டின் முதற்பகுதிவரை பாண்டியர்களின் ஆட்சிப்பகுதியாக இருந்து பின் சேரர்கள் வசம் மற்றமடைந்ததாகத் தெரிகிறது.
                   பின் அது 1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது. கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் அவர்கள் மலையாள மொழிப் பகுதியாகிய கேரளத்தோடு இணைந்திருக்க விரும்பவில்லை. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி கேரள அரசால் புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ஷல் நேசமணி தலைமையில் விடுதலைப் போராட்டம் தொடங்கியது. 1956 நவம்பர் முதல் நாள் குமரி மாவட்டம் தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறியது.தற்போது கல்குளம், விளவங்கோடு வட்டங்களாக இருக்கும் இடை நாடு(வேணாடு), சேரர்கள்ஆட்சிப்பகுதியாகஇருந்தது.பின் ஓய்சலயர்கள் மற்றும் மேற்கு சாளுக்கியர்களின் வளர்ச்சியினால் சேரர்கள் வலுவிழந்தனர். ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகள் வேணாட்டை ஆண்டு வந்த வீர மன்னர்கள், தொடர்ந்து பக்கத்து பாண்டிய மன்னர்களுடன் எல்லைத் தகராறில் ஈடுபட்டு வந்ததால் விஜயநகர மன்னர்கள் இவர்களுக்கு எதிராகப் படையெடுத்தனர். இதன் விளைவாக, கன்னியாகுமரி, 1609- ஆம் ஆண்டு மதுரை, விஸ்வநாத நாயக்கரின்வலுவான கரங்களுக்குள்ளானது. இதன் விளைவாக 1634 வரை நாஞ்சில் நாட்டுக்கு எந்த விதமான வலுவான அச்சுறுத்தல்களும் இல்லாமல் இருந்தது. பின்னர் ரவி வர்மா, மார்த்தாண்ட வர்மா, ஆகிய அரசர்களின் காலகட்டத்தில் வேணாடு கடும் உள்நாட்டுக் குழப்பங்களைச் சந்தித்தது. இதைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆற்காடு சந்தா சாகிபு நாஞ்சில் நாட்டைத் தாக்கினார்.
             குளச்சல் போரில் மார்த்தாண்ட வர்மா டச்சுபோர்வீரர்களை வெற்றி கொண்ட போதிலும் சந்தா சாகிபுவை சமாளிக்க முடியாததால் போர்க்களத்தை விட்டுப் பின்வாங்க வேண்டியிருந்தது. கி.பி. 1758ல் வேணாட்டின் கடைசி மன்னன் மார்த்தாண்ட வர்மா மர்மமான முறையில் மரணமடைந்த பின் மலபார் பகுதியை ஆண்டு வந்த நம்பூதிரி-நாயர் கூட்டணி ஆட்சி வேணாட்டு அரசை கைப்பற்றியது. வேணாடு நம்பூதிரி-நாயர் கூட்டணியின் மன்னன் கார்த்திகை திருநாள் ராமவர்மனால்திருவிதாங்கூர் அரசாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மார்த்தாண்ட வர்மாவுக்கு பிறகு வந்த மன்னர்கள் அனைவரும் வலுவற்றவர்களாக இருந்ததால்ஆங்கிலேயர்களின் தலையீடு இந்நாட்டின் மீது அவ்வப்போது இருந்து வந்து, பின் படிப்படியாக அவர்களின் முழு கட்டுப்பாட்டுக்கு வந்த வேணாட்டை 1947 வரை அவர்களே ஆண்டு வந்தனர்.
             இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக திருமலை என்பவர் நவம்பர் 1, 1956 அன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.இம்மாவட்டம், முன்பு நூற்றுக்கணக்கான நீர்நிலைகளையும், வாய்க்கால்களையும் பெற்றிருந்ததன் மூலம்திருவிதாங்கூரின் களஞ்சியம் என அறியப்பட்டது. ரப்பர் மற்றும் நறுமணப்பொருள்கள் மலைச்சரிவுகளிலும் நெல்,வாழை, தென்னை ஆகியன கடற்கரையை ஒட்டிய சமபூமிகளிலும் பெருமளவில் காணப்படுகின்றன. இம்மாவட்டம் பொதுவாக மலை சார்ந்த பகுதிகளாகவும், கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் சமபூமியாகவும் காட்சியளிக்கிறது. நிலப்பரப்பின் உயரம் கடற்கரையிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளை நோக்கி மெதுவாக உயர்கிறது. இம்மாவட்டதிற்கு 62 கி.மீ மேற்குக் கடற்கரையும், 6 கி.மீ கிழக்கு கடற்கரையும் உள்ளன. இம்மாவட்டத்தின் நிலப்பகுதியில் 48.9% விவசாய நிலமாகவும், 32.5% அடர்ந்த காட்டுப் பகுதியாகவும் இருக்கிறது.

புவியியல்


மாவட்டத்தின் கடற்கரைகள் பல பாறை மயமாகவும் மற்றவிடங்கள் வெள்ளை மணற்பகுதியாகவும் காணப்படுகின்றன. கிழக்கு கடற்கரைகளில் பவளப்பாறையின் அம்சங்கள் (பெரும்பாலும் அழிந்திருந்தாலும்) பல காணப்படுகின்றன. பல வகையான வண்ண சங்கு வகைகளும் காணப்படுகின்றன. மேலும் சில கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் மணல் தாதுவளம் நிறைந்ததாக இருக்கிறது.

தட்பவெப்ப நிலை

கடந்த ஐம்பது ஆண்டு கால ஆய்வில், வடகிழக்கு பருவக்காற்று வீசும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, 24 மழை நாட்களில் 549 மி.மீ மழையும், தென்மேற்கு பருவக்காற்று வீசும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை 27 மழை நாட்களில் 537 மி.மீ. மழை பெய்திருக்கிறது. இதுவே மார்ச்முதல் மே மாதம் வரையிலான வேனிற் காலத்தில் 11 மழை நாட்களில் 332 மி.மீ மழையும் பதிவாகி இருக்கிறது. மாவட்டத்தின் ஒரு ஆண்டு சராசரி மழை 1465 மி,மீ. இதில் அக்டோபர் மாத அளவான 247 மி.மீ அதிகபட்சமாகவும், பெப்ரவரி மாத அளவான 21 மி.மீ குறைந்தபட்சமாகவும் இருக்கிறது. மாவட்டத்தின் ஈரப்பதம் 60 முதல் 100 சதவிகிதமாக இருக்கிறது.

ஆறுகள்

இம்மாவட்டத்தின் முக்கிய நதிகள் தாமிரபரணிவள்ளியாறுபழையாறு ஆகியன.

தாமிரபரணி

             இந்நதி குழித்துறையாறு என பரவலாக அறியப்படுகிறது. இதற்கு இரண்டு துணை ஆறுகள் உள்ளன. அவை கோதையாறு மற்றும் பறளியாறுஆகியன. இவைகள் முறையே பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைக்கட்டுகளிலிருந்து வருகின்றன. மேலும் கோதையாறு ஆற்றுக்கும் இரண்டு துணை ஆறுகள் உள்ளன. இவை சிற்றாறு - 1, மற்றும் சிற்றாறு - 2 ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் இந்தத் தாமிரபரணி கன்னியாகுமரிக்கு 56 கி.மீ மேற்காக அமைந்திருக்கும் தேங்காய்ப்பட்டணம் என்னும் சிற்றூரில் அரபிக் கடலில் கலக்கிறது.

வள்ளியாறு

            இவ்வாறும் இதன் ஒரு துணை ஆறாகிய தூவலாறும்வேளிமலை மலையில் உற்பத்தியாகி, பி.பி.கால்வாய், மற்றும் அதன் பிரிவுக் கால்வாய்களிலிருந்தும் வரும் ஓடைகளின் நீரையும் வாங்கிக்கொண்டு, மணவாளக்குறிச்சி அருகே அரபிக்கடலில் கலக்கிறது.

பழையாறு

இவ்வாறு நாகர்கோவிலுக்கு 18 கி.மீ வடமேற்காக அமைந்திருக்கும் சுருளகோடு என்னும் சிற்றூரில் தொடங்குகிறது. இது தோவாளைஅனந்தன் நகர், மற்றும் என்.பி. கால்வாய்களின் ஓடைகளின் நீர்களை வாங்கும் ஒரு ஓடையாறாகவே இருக்கிறது. மணக்குடியில் கடலில் கலக்கிறது.

அணைகள்

பேச்சுப்பாறை அணை

இவ்வணை கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 1897–1906 காலக்கட்டத்தில் ஐரோப்பிய பொறியாளர் திரு மிஞ்சின் அவர்களால் அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் மூலம் திருநாள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இந்த அணையின் உயரம் முதலில் 42 அடியாக இருந்தது. பின்பு 1964-ஆம் ஆண்டு மேலும் 6 அடிகள் கூட்ட முடிவு செய்து 1969 ஆம் ஆண்டு அணையின் உயரம் 48 அடியாக கட்டிமுடிக்கப்பட்டது.

பெருஞ்சாணி அணை

1958இல் கட்டி முடிக்கப்பட்ட இவ்வணையின் கொள்ளவு 72 அடியாகும்.

முக்கடல் அணை

முக்கடல் அணை வேம்பாறு குறுக்கே கட்டப்படுள்ளது. நாகர்கோவில் நகரின் முக்கிய குடிநீர் ஆதரமாக விளங்குகிறது.

சிற்றாறு அணை

சிற்றாறு 1 மற்றும் சிற்றாறு 2 அணைகள் சிற்றாறின் குறுக்கே 1970-ல் கட்டி முடிக்கப் பட்டது.
மாம்பழத்துறையாறு அணை
இது வில்லுக்குறியிலிருந்து சுமார் 3 கட்டைத் (கிலோமீட்டர்) தொலைவில் ஆனைக்கிடங்கு என்னுமிடத்தில் மாம்பழத்துறையாற்றின் குறுக்கே கடந்த 2010-ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இந்த அணை 44.54 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.80 அடி உயரமுள்ள இவ்வணையின் மூலம் 25 குளங்களும் 905.76 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதிப் பெறுகின்றது.

தாவரங்களும் விலங்குகளும்

கீரிப்பாறை பகுதிகளில் பல வகைப்பட்ட பேரணிச் செடிகளையும் பல வெப்பமண்டல தாவர வகைகளையும் பார்க்க முடியும். பேச்சிப்பாறைபகுதிகளில் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு இலைகளியும் பூக்களையும் உடைய மரங்கள், பச்சை படர்ந்த காட்டுப்பகுதிகளுக்கு மத்தியில் ஜொலிப்பதை பார்க்க முடியும்.
இம்மாவட்டத்தில் காணப்படும் விலங்குகளில் முள்ளம் பன்றிகாட்டுப் பன்றி,பல்லி வகைகள், பல இன கொக்குநாரைநீர்க்கோழிமலைப் பாம்பு, பல வகைப் பாம்புகள் உட்பட பல வகைப்பட்ட ஊர்வன ஆகியவை அடங்கும்.மேலும் மகேந்திரகிரி மலையில் (கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்துக்கு மேல்) முயல்கள்மான்கள்சிறுத்தை ஆகியவற்றை காண முடியும். அதன் அருகாமையிலுள்ள நெடுஞ்சாலையில் சிறுத்தை குட்டிகள் சாதாரணமாக வந்து போவதை பார்க்க முடியும். கீரிப்பாறை சார்ந்த பகுதிகள் யானைகள்காட்டு எருமைகரடி போன்ற விலங்கினங்களின் உறைவிடமாகத் திகழ்கிறது. தேரூர் பகுதியில் பல வகையான கொக்குகளை சில குறிப்பிட்ட காலச் சூழல்களில் பார்க்க முடியும்.
மருத்துவ வரலாறு
இம்மாவட்டத்துக்கு இயற்கை பல அரிய மூலிகை வகைகளையும் தாது வளங்களையும் தாங்கும் மலைகளையும் நன்கொடையாகத் தந்திருக்கிறது. கன்னியாகுமரிக்கு அருகாமையில் அமைந்திருக்கும்மருந்துவாழ் மலை அசோகர் காலகட்டத்தில் வாழ்ந்த புத்த பிக்குக்களால் மருத்துவ மற்றும் ஆன்மீகபாரம்பரியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இம்மலை இராமருக்கும் இராவணனுக்கும் இடையில் நடந்த காப்பிய யுத்தத்தின் போது, அனுமன் சுமந்து சென்ற Gandha Madhana மலையின் உடைந்து விழுந்த பகுதியாக இதன் புராணாக் குறிப்பு கூறுகிறது. இம்மலையில் பல அரிய வகை மூலிகைகள் அதிக அளவில் உள்ளன.
மேலும் செந்தமிழின் முதல் இலக்கண ஆசிரியரும், முதல் சித்தருமான அகத்தியர் இந்நிலப்பரப்பின் எல்லையில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இப்பகுதியில் அகத்தீஸ்வரம் என்னும் ஊரும் உள்ளது. இவ்வூருக்கும் இப்பெயர் ஒரு குறு முனிவரிடமிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. இவ்வூரில் அகஸ்தீஸ்வரால்,அகஸ்தீஸ்வரமுடையாருக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு கோயிலுமுள்ளது. மருத்துவம், இலக்கணம் மட்டுமல்லாமல் வர்மக்கலையிலும் அகத்தியர் திறம்படைத்தவராவார். பிரபல பனை ஓலை எழுத்தாக்கங்களான வர்மாணிவர்மக்கலை ஆகியன அவரால் இயற்றப்பட்டவைகளாகும். இன்றும் இந்த வர்ம வைத்திய முறைகள் கன்னியாகுமரிப் பகுதிகளில் குரு-சிஷ்ய முறை|குரு-சிஷ்ய முறையில்]] கற்பிக்கப்படுகிறது. மேலும் இந்த தமிழ் வைத்திய முறையை பயன்படுத்தி இத்துறையில் வல்லுனர்களால் மருத்துவம் செய்யப்படுகிறது.
பண்பாடு
இம்மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களின் முதன்மை மொழி தமிழ் ஆகும். மலையாளம் பேசுகின்ற சிறுபான்மையோரும் உள்ளனர். இந்த மாவட்டத்தில் பேசப்பட்டு வரும் வட்டாரத் தமிழ் சிறிது மலையாளம் கலந்து தனித்தன்மை கொண்டுள்ளது

சமயம்

கிறித்தவர்களும்இந்துக்களும் இம்மாவட்டத்தில் கணிசமான சதவிகிதத்தில் உள்ளனர். மேலும் சிலஇஸ்லாமியப் பெரும்பான்மை மண்டலங்களும் இங்கு உண்டு. இம்மாவட்ட கிறிஸ்தவர்களின் சதவிகிதம், அவர்களின் தேசிய சதவிகிதத்தை விட அதிகம். 2011 மக்கள் தொகைக் கணககுப்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறித்தவர்கள் 46.85%, இந்துக்கள் 48.64%, இசுலாமியர் 4.20% உள்ளனர் 
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சமயமான அய்யாவழியின் பிறப்பிடமும் கன்னியாகுமரி மாவட்டமாகும். மேலும் இச்சமயத்தினரால் மொத்த குமரி மாவட்டமே புனிதமாக கருதப்படுகிறது. மேலும்,திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், குறிப்பாக தற்போது குமரி மாவட்டமாக உள்ள தென் திருவிதாங்கூரில்கிறிஸ்தவ மறை பரப்பாளர்கள் ஆங்கில கல்வியின் முன்னோடிகளாக திகழ்ந்தனர். இங்கு ஏற்பட்ட கல்வியறிவின் வளர்ச்சியாலும் இதர காரணங்களாலும் சாதி முறை பெருமளவில் வலுவிழந்து காணப்படுகிறது.
               இம்மாவட்டத்தின் மக்கள் சாதிமத இன, வேறுபாடுகளின்றி பழகுகின்றபொழுதும் இங்கு 1980 களில் இங்கு பெரிய அளவில் மதக்கலவரம் வெடித்தது.மண்டைக்காடு மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவின் போது இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் வெடித்தமண்டைக்காடு கலவரம், பல்வேறு விதங்களில் பரவிய வதந்திகளின் காரணமாக தெரிகிறது. மண்டைக்காடு கலவரத்தில் ராஜாக்கமங்கலம,ஈத்தாமொழி, பிள்ளைத்தோப்பு, நாகர்கோவில் ஆகிய இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கலவரத்தை அடக்கும் விதத்தில் நடந்த இந்தத் துப்பக்கிசூட்டில் பல பொது மக்களும் கொல்லப்பட்டனர்.

பொதுத்துறை நிர்வாகங்கள்

காவல்துறை

குமரிமாவட்ட காவல்துறை, காவல்துறை கண்காணிப்பாளரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்குகிறது. இவரின் கீழ் இரண்டு கூடுதல்-காவல்துறை கண்காணிப்பாளர்கள் இயங்குகின்றனர். குமரிமாவட்ட காவல்துறை நிர்வாகம், நான்கு துணைப்பிரிவுகளாக இயங்குகிறது[7].

கன்னியாகுமரி துணைப்பிரிவு

  1. கன்னியாகுமரி
  2. தென் தாமரைக்குளம்
  3. சுசீந்திரம்
  4. அஞ்சுகிராமம் (சுசீந்திரம் கீழ்)
  5. இராசாக்கமங்கலம்
  6. ஈத்தாமொழி (இராசாக்கமங்கலம் கீழ்)
  7. அனைத்து மகளீர் காவல்நிலையம், கன்னியாகுமரி

நாகர்கோவில் துணைப்பிரிவு

  1. கோட்டார்
  2. வடசேரி
  3. ஆரல்வாய்மொழி
  4. பூதப்பாண்டி
  5. நேசமணி நகர்
  6. ஆசாரிப்பள்ளம் (நேசமணி நகர் கீழ்)
  7. மத்தியக் குற்றப்பிரிவு நிலையம், நாகர்கோவில்
  8. அனைத்து மகளீர் காவல்நிலையம், நாகர்கோவில்
  9. போக்குவரத்து விசாரணை
  10. போக்குவரத்துக் கட்டுப்பாடுப் பிரிவு

தக்கலை துணைப்பிரிவு

  1. தக்கலை
  2. கோட்டியோடு
  3. களியக்காவிளை
  4. பலுகல் (களியக்காவிளை கீழ்)
  5. அருமனை
  6. கடையாலுமூடு
  7. அருக்கனி (அருமனை கீழ்)
  8. குலசேகரம்
  9. பேச்சிப்பாறை (குலசேகரம் கீழ்)
  10. திருவட்டார்
  11. குழித்துறை
  12. கீரிப்பறை
  13. போக்குவரத்துக் கட்டுப்பாடுப் பிரிவு, மார்த்தாண்டம்
  14. அனைத்து மகளீர் காவல்நிலையம், குழித்துறை

குளச்சல் துணைப்பிரிவு

  1. மணவாளக்குறிச்சி
  2. வெள்ளிச்சந்தை
  3. மண்டைக்காடு (வெள்ளிச்சந்தை கீழ்)
  4. இரணியல்
  5. குளச்சல்
  6. கருங்கல்
  7. புத்தன்கடை
  8. கொல்லங்கோடு
  9. நித்திரைவிளை
  10. அனைத்து மகளீர் காவல்நிலையம், குளச்சல்


பொருளாதாரம்

         தமிழ் நாட்டின் மொத்த ரப்பர் உற்பத்தியில் 95% கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. காற்றாலைகளுக்கு மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு உண்டு. ஆரல்வாய்மொழி பகுதியில் இவை அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன.

விவசாயம்

முக்கிய பயிர்வகைகள்

  1. அரிசி – 400 ச.கி.மீ
  2. தென்னை – 210 ச.கி.மீ
  3. ரப்பர் – 194.78 ச.கி.மீ
  4. மரவள்ளிக்கிழங்கு – 123.50 ச.கி.மீ
  5. வாழை – 50 ச.கி.மீ
  6. பருப்பு – 30 ச.கி.மீ
  7. முந்திரி – 20 ச.கி.மீ
  8. பனை – 16.31 ச.கி.மீ
  9. மாம்பழம் – 17.70 ச.கி.மீ
  10. புளி – 13.33 ச.கி.மீ
  11. கமுகு – 9.80 ச.கி.மீ
  12. பலா – 7.65 ச.கி.மீ
  13. கிராம்பு – 5.18 ச.கி.மீ

கைவினைப் பொருட்களும் குடிசைத் தொழில்களும்

                குமரி மாவட்டம் கைவினைப் பொருட்களுக்கு பெயர் போன மாவட்டமாகும். குறிப்பாக தோல் நீக்கப்படாத தேங்காயில் செய்யப்படும் குரங்குபொம்மைகள், தேங்காய் ஓடு மற்றும் மரத்தால் செய்யப்படும் கைவினைப் பொருட்கள் ஆகியன முக்கியமானவை. மேலும் சங்கினாலான கைவினைப்பொருட்களும் சிறப்பு வாய்ந்தவை. தமிழகத்தின் மொத்த கயிறு உற்பத்தியில் 28.4 சதவிகிதமும் பாய் உற்பத்தியில் 61.5 சதவிகிதமும் இம்மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ரப்பர்

ரப்பர் உற்பத்தி இம்மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவாட்டத்தின் மேற்குப்பகுதியில் கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன.

பழங்கள்

நேந்திரம் பழம்,செந்துளுவன்ரசகதளிபாளயம்கொட்டான்துளுவம்மட்டி, உட்பட பல வகையான வாழைப்பழங்கள் இங்கு பயிரிடப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல், பலாப்பழம் (வரிக்கில மற்றும் கூளன்), மாம்பழம் (அல்போன்சா, பங்களோரா, நீலம், மற்றும் ஒட்டு) தேங்காய் ஆகியன இம்மாவட்டத்தின் விவசாய வளத்துக்கு பெருமை சேர்க்கின்றன. இவை தவிர ரோஜாசெவ்வந்தி, உட்பட பல மலர்களும் இங்கே பயிரிடப்படுகின்றன.

மீன் பிடிப்பு

கன்னியாகுமரி கடல் பகுதிகளில் இருநூறுக்கும் மேற்பட்ட இன மீன்கள் கிடைக்கின்றன.
கல்வி
கல்வியறிவு விகிதத்தில் (91.75 %) குமரி மாவட்டம் தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது. மேலும் கல்வித்தரத்திலும் முதலிடம் வகிக்கிறது.

பள்ளிகள்

  1. மழலையர் பள்ளிகள் - 83
  2. தொடக்கப் பள்ளிகள் - 413
  3. நடுநிலைப் பள்ளிகள் - 147
  4. உயர் நிலைப் பள்ளிகள் - 121
  5. மேல் நிலைப் பள்ளிகள் - 120
  6. மொத்தம் 884

கல்லூரிகள்

  1. அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் - 12
  2. சுயநிதிக் கல்லூரிகள் - 4
  3. கல்வியியல் கல்லூரிகள் -8
  4. தொழில் கல்லூரிகள் - 20
  5. கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி – 1
  6. அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி - 1
  7. பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி – 1
சுற்றுலாத் தலங்கள்
  • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில்
  • விவேகானந்த கேந்திரம்
  • விவேகானந்தர் பாறை
  • மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில்
  • விவேகானந்தர் நினைவு மண்டபம்
  • அய்யன் திருவள்ளுவர் சிலை
  • காந்தி மண்டபம், கன்னியாகுமரி
  • கன்னியாகுமரி
  • நாகர்கோவில்
  • சுசீந்திரம்
  • வட்டக் கோட்டை
  • பத்மநாபபுரம் அரண்மனை
  • சிதறால் சமண நினைவு சின்னங்கள்
  • மாத்தூர் தொட்டிப் பாலம்
  • திருநந்திக்கரை குகைக் கோவில்
  • திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்
  • உதயகிரிக் கோட்டை
  • உலக்கை அருவி
  • பேச்சிப்பாறை அணைக்கட்டு
  • பெருஞ்சாணி அணைக்கட்டு
  • முக்கடல் அணைக்கட்டு
  • திற்பரப்பு நீர்வீழ்ச்சி
  • சொத்தவிளை கடற்கரை
  • முட்டம் கடற்கரை
  • தேங்காய்ப்பட்டணம் கடற்கரை
  • சங்குத்துறை கடற்கரை
  • ஆலஞ்சி கடற்கரை
  • கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகம்
குறிப்பிடத்தக்கவர்கள்
  1.  அய்யா வைகுண்டர்
  2. தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் - தொல்காப்பியம் எழுத்ததிகாரத்திற்கு உரைப்பாயிரம் எழுதிய இளம்பூரணம் என்னும் தமிழ்ப்புலவர் நான்கு மறைகளையும் முற்றும் உணர்ந்த "அதங்கோடு" என்கின்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என்று எழுதிஉள்ளார்
  3. மார்ஷல் நேசமணி
  4. கலைவானர் என். எஸ். கிருஷ்ணன்
  5. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
  6. ப. ஜீவானந்தம்
  7. தமிழ் புலவர் சதாவதானி செய்கு தம்பி பாவலர் – சதாவதானம் எனும் கலையில் சிறப்பு பெற்றவர்
  8. புன்னைக்காடு கொச்சன் ஆசான் - 1860–1880 காலகட்டத்தில் வாழ்ந்த திருவாங்கூர் மன்னரான ஆயில்லியம் திருநாள் ராமவர்மாவிடமிருந்து வீரவாளும் முத்துக்குடையும் பரிசாக பெற்றவர்
  9. புலிப்புனம் இசக்கிமாடன் தண்டல்காரன் - பத்மநாபபுரத்திலிருந்து கண்ணணூர் வரை நாயரை கொண்டு ஓலை சுமக்கவைத்தவர்
  10. பளுகல் இரத்தசாட்சி தேவசகாயம் நாடார் - 1854-ல் வேலைக்கு கூலி வேண்டும் என்று போராடியவர் (காலம் உத்திரம் திருநாள் மாகாராஜா 1847–1860)
  11. புலிப்புனம் குட்டிநாடார் மற்றும் உடன்பிறந்தவர்கள் - திருவாங்கூரில் முதல் பேருந்துதை இயக்கியவர் காலம் ஸ்ரீமூலம் திருநாள் ராமவர்மா (1885–1924)
  12. களியக்காவிளை சத்தியநாதன் நாடார் - தென் திருவாங்கூரில் முதன் முதலில் கமேர்ஷியல் பயிற்சி பள்ளியை நிறுவியவர் காலம் (1923)
  13. பொன் பாக்கியநாதன் நாடார் - “சான்றோர் குல சந்திரிகை” என்ற தாய்மொழி தமிழில் குமரியில் முதல் சமுதாய நூல் எழுதியவர் காலம் (1892)
  14. நாகர்கோவில் எம். டானியேல் - தென் திருவாங்கூரில் முதல் பட்டதாரி காலம் (1889)
  15. பள்ளியாடி Dt. Yesudian Henry - திருவாங்கூரில் முதல் டாக்டர் (தெரசர்) காலம் (1847–1934)
  16. மேட்டுகடை S. பீருக்கண்ணு - இசுலாமியராக மாறிய முதல் நாடார் சமுதாயத்தவர்.
  17. இராமன்புதூர் D.D. பிறான்சிஸ் - குமரிக்கு ரயில் பாதை வேண்டும் என்று குரல் கொடுத்த முதல் மனிதர் மற்றும் கன்னியாகுமரி முதல் குளச்சல் வரை கடலோரம் சாலை அமைத்தவர் (காலம் 15-09-1873 to 17-10-1967)
  18. நாகர்கோவில் பாக்கியம் - திருவாங்கூரில் முதன் முதலில் வீட்டுக்கு ஓடு போட்டு கூரை வேய்ந்தவர்
  19. காரங்காடு சவரிமுத்து நாடார் - தனியார் துறையில் முதன் முதலில் ஓடு தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்தவர் காலம் 1893
  20. வெள்ளைய நாடார் - குமாரகோவில் முருகன் கோவிலில் முதன் முதல் ஆலைய பிரேவேசம் சென்றவர் காலம் (1854)
  21. குருந்தன்கோடு, நங்கள்விளை ஆன்டிநாடார் - முதன் முதலில் நங்கள்விளையில் முருகன் கோவில் கட்டியவர் காலம் 12-05-1870-08-01-1961
  22. அகஸ்தீஸ்வரம் ஜோசப் செல்லையா டானியேல் - மலையாள படஉலகில் “விகதகுமாரன்” என்ற முதல் படத்தை தயாரித்து வெளியிட்டவர்
  23. நாகர்கோவில் சுந்தரராஜ் டானில் - மலையாள படஉலகில் இரண்டாவது “மார்த்தாண்டவர்மா” என்ற ஊமை படத்தை தயாரித்தவர்
  24. ஆலஞ்சி திருப்பாப்பு நாடார் -கள்ளியங்காட்டு நீலி ( பெண் பேய்) யை வீட்டு வேலைக்கு அமர்த்திய மாந்திரீகன்
  25. கண்ணனுர், தச்சன்விளை அனந்தபத்மநாடார் ஆசான் - மன்னன் மார்தாண்டவர்மாவின் முதன்மை தனபதி காலம் (09-08-1697-14-09-1749)
  26. ஆற்றூர், செவரக்கோடு செல்லம்மை ஆசான் - யானைக்கு பிணி தீர்த்தவர்
  27. கள்ளியங்காடு பி.சி ஜோசப் - திருவாங்கூரில் முதல் செய்திதாள் தொடங்கியவர் "திருவாங்கூர் அபிமானி"
  28. பள்ளியாடி, முருங்கவிளை H. ஜெயபால் வக்கீல் - தென்இந்திய திருச்சபை ஐக்கியத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர் காலம் ( 20-08-1906 19-03-1967)
  29. அப்பட்டுவிளை மரியேந்திரன் ஆசாரியார் - மாட்டு வண்டிக்கு மரக்குடம் கண்டுபிடித்தவர்
  30. தென்தாமரைகுளம், கோட்டையடி ஏ. ஞானசிகாமணி – திருவாங்கூரில் முதல் முனிசிப் காலம் (13-2-1870 – 18-11-1941)
  31. மார்த்தாண்டம் ஜி.எஸ் மணி – குமரியின் முதல் பொது உடமை சிந்தனையாளர்
  32. பால். வி. டானியல் - குமரி மாவட்டம் பிரிவதற்கு வித்திட்ட முதல் நபர்
  33. அகஸ்தீஸ்வரம் ஜாஷிவா கண்டிராக் - பேச்சுபாறை அணையைக் கட்டிய முதல் அரசாங்க காண்டிராக்டர்

No comments:

Post a Comment